எழுதபடாத கவிதைகள் - நானடா

உன் எதிரியிருக்கும் நான் எதிரியல்ல
உண்மையில் உனக்கு நான் எமனடா...

தடை நூறு வேண்டாம் பலகோடி
தடை கொண்டுவா நான் தாண்டுவேன்...

உயிர் பருகிட துடிப்பவனல்ல நான்
உனை கொல்லவும் நினைக்கலை தான்..

திரும்பும் திசைமட்டுமல்ல காணும்
துளியிலும் எல்லையாய் நானடா..

நல்லவனாய் நினைத்திரு நான் தீயோனாகும் வரை
நன்மைகள் இனியேது நான் வென்றிட நினை...

பகை கொண்டு வா நான் கொன்றிட
நகை என்பதே கனவாகிடும் படி நான் நின்றிட...

எனை வெல்லும் வெறியோடுவா - வீரம்
தனை மேலும் மெருகேற்றிவா - அன்றும்
உனை வெல்வேன் நானடா...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post