நிலையென்ன...

நிதம் ஒரு வரி வரியாய்...
நித்தம் எழுதும் ஓர் கவியாய்...
ஓயாது அடிக்கும் காற்றுவெறியாய்....
ஓங்கார ரீங்கார ஒலியாய்...
நிகழ்வுகள் எல்லாம் கவிதை புயல்...
இருக்கு இன்பமும் துன்பமும்...
இதயம் இழைந்த துள்ளலாய்..
வாசிப்பவன் ரசனையில்...




சிறகில் பிரிந்த இறகு..
காற்றில் பறந்த சருகு..
சிகரம் வழுக்கிய நீர்துளி ...
நிலையென்ன...
காற்றில் தானே தனி பறவையாகும்..
கதைபேசி களைத்துபோய் கரையோதுங்கும்...
தற்கொலையல்ல அருவியாகி நதியாகும்...
கவலையென்ன...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم