மூன்று எழுத்து கவிதை

அமுது தரும் அன்பு
~அழியா புகழ் கருணை
கருது மொழிக் கினிது
~கழியா பொழுது உனது
முதல் இதழ் படர்
~ மலர் எனவே புதிது
முதுமை எனவே எண்ணா
~ முதுமை கொண்ட குமரி

புதிய நெறியை பதிய
~ விதியை மாற்று என்று
புதிய முறமை தன்னை
~புகழ  புகழ பெரிது
உவமை உருகு உடமை
~ உளமை எனவே புகழ
உவமை இல்லா உலகை
~ உயர முனையு மன்னை

முன்னை கண்ட தன்னை
~ மண்ணை பேணும் நன்னை
பொன்னை நிகர் சொல்லை
~ அள்ளி சூடும் நல்லை
அவனி அமையு மழகு
~ அலகி லழகு எல்லை
தேடும் இளைய பிள்ளை
~ தன்னை சேரும் அன்னை

கணையா லழியா முதலி
~ கவியை தரும் குழலி
அணையா தன்பை ஈந்து
~ அகில உலகை வென்ற
துணையா மெனது தமிழ்
~ கணித மெண்ண மூன்று..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post