தூயவன் கானா ..

சாந்து பொட்டு மீனா
நான் பாடபோறேன் கானா
காண்டு கீண்டு வேண்டா
நான் வாங்கிதரேன் பாண்டா

ஐத்தைக்கொரு பொண்ணு
அவா அல்வாகட பன்னு
டாலடிக்கிர கண்ணு
போத ஏறலயே ஜின்னு

பைக்க புடிக்கும் மாமே
நானும் மைக்க புடிச்சா ரேமோ
வொய்டு வேட்டி காரன்
மோசம் காட்டிடுவான் பாரேன்.

லைட்டு போட்டு பாத்தா
நாம போட்ட தெல்லாம் ஓட்டா

பாட்டல கொண்டாந்தா
நின்னு ஜெச்சிருமே நோட்டா..

காத்து கொடுத்த காசா
நோட்டு மாத்தியடிச்ச காசா

பாத்து கேள்வி கேட்டான்
புடிச்சி ஜெயிலுலதான் போட்டான்

மாத்தி வெக்கனும் ரூட்ட
நாமும் சாத்தி வெக்கனும் கேட்ட.

ஏழைக்குத்தான் பாட்டு
பாதை மாறனும் கேட்டு...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post