புத்தகமே என் புத்தகமே

புத்தகமே என் புத்தகமே

நற்றொரு கேள்வி உதித்தது என்னுள்.. 


ஊடல் தகர்த்து

உன்னை அடைந்து

ஆடை தளர்த்தி 

அங்கம் புரட்டி

அறிந்த பின்னே - கேட்கிறேன்.; உள்ளதை சொல்


உன் உள்ளக் குளத்தில்

உள்ளக் காதல் யார்மீது? 


கருத்தை எடுத்து

வார்த்தை சரத்தில்

நெருக்கி அமைத்து

உன்னுள் விதைத்த

படைத்தவன் மீதா? - இல்லை


புரட்டிப் புரட்டி

உள்ளம் திரட்டி

உன்னை சுகிக்கும் 

வாசகன் மீதா?. - விடைசொல்.. 


மூடக்கவிஞனே 

குறும்பு முளைத்ததோ? 

காதல் செய்யத்தான்

காலம் இருக்குதோ? - எனினும் 


உள்ளே விதைத்த

எழுத்தாளனோ!.

மெல்லச் சுவைத்த 

வாசகனோ! 

என் மனதில்

எப்போதும் காதலனாவதில்லை


என்னை உணர்ந்து

என்னில் நிறைந்து

என்போல் நடப்பவனே

எனதரும் காதலன்.. 


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post