விபரீதம். - சிறுகதை

தாழிட்டு பூட்டப்படாத வீட்டினுள் சாத்தப்பட்டிருந்த கதவை திறந்தார் வள்ளிராஜன். முன்பு க்ரைம் இன்ஸ்பெக்டர் ஆக இருந்து தன் கடமையின் தீரத்தால் க்ரைம் டிபார்ட்மண்ட் எஸ்பி ஆக உயர்ந்தவர். கசக்கியும் கிழித்தும் வீசியும் தரை படர்ந்த காகிதங்கள் நிறைந்த ஹாலில் மெல்ல நடந்து வந்தார். இரவு முழுதும் யாரோ காதல் கவிதை எழுத முயற்சித்ததாய் சொல்வேன் நான். அவர் அத்தனை அபத்தமான ரசனைக்காரர் இல்லை...

மூலையில் அமைக்கப்பட்ட சோபாவில். போர்வை பொட்டலம் . மெல்ல அருகில் சென்று தன் கைக்கம்பால் விலக்கிட. வெடுக்கென அந்த போர்வை பொட்டலம் எழுந்தமர்ந்திட வள்ளிராஜன் அதிர்ந்து போனதை அவரது இடதுகை உதறல் நிரூப்பித்தது கூடவே பீப்பி தொந்தரவையும். யார்வேண்டும் என்ற அந்த போர்வை பொட்டலமாய் கிடந்த இளைஞன் . வள்ளிராஜனுக்கு ஆசுவாசம் கொள்ள சில நேரம் தேவை என்பதை உணர்ந்த இளைஞன். உட்காருங்க காபி எடுத்துட்டு வரேன் என்று சென்றிட.

மெல்ல மெல்ல மூச்சை பிராணாயாமம் போல சீரமைத்து கொண்ட வள்ளிராஜன் தன் வயதை நொந்துகொண்டார். மெல்ல மெல்ல அறையை நோட்டம் பார்க்க சோபாவின் அருகிலிருந்த செய்தித்தாளை ஆராய்ந்தார்.. சினிமா விளம்பரங்கள் கிசுகிசு அறிவிப்பு என்று படித்தார். தினம் குற்றங்களோடு ஊடாடுபவர்க்கு இது ஆயாசமின்றி அமைதி தருமென நம்பினார். மற்றபடி சினிமாவுக்கும் அவர்க்கும் தூரமோ தூரம்.

காலை சிரம பரிகாரங்களை முடித்து தீனமாய் காபி கோப்பையுடன் வந்தமர்ந்த இளைஞனை நேர்கொண்டு பார்த்த வள்ளிராஜன் . அவன்முகத்தில் சற்று மங்கிய நெற்றியை கண்டு அதில் ஒரு இன்சளவு வரையபட்ட கட்டுவிரியன் போன்ற தையல் தழும்பை கவனிக்க தவறவில்லை.

காபி எடுத்துகங்க . என்ன தனியா வந்துருக்கீங்க பொதுவா போலீஸ் தனியா போறது சில இடங்கள் தான். மாமுல். வீடு . ஆஸ்பிடல். இது உங்க வீடல்ல ஆஸ்பிடல்லல்ல நான் மாமுல் தருமாளும் இல்ல. அவன் போச்சின் குரூரம் வள்ளிராஜனுக்கு கோபத்தை உண்டாக்கினும் அவர் பொறுமையுடன்.

இது என்ன மூணாவது கப் காபி. ? என்றார்.. என் பாஸுக்கு அவருக்கு என் காபினா இஷ்டம் அதுக்காகவே வேலைக்கு சேத்துனாரு. ம் உனக்கு வேலை இல்லைனா நானே அதைதான் செய்திருப்பேன் என்றார் வள்ளிராஜன். அந்த வசதியான புன்னகையில் நெருங்கிய இளைஞன். சரி இங்க எதுக்கு வந்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா? . இந்த மூன்றாம் காபி கம்பனிக்காக என்று பெரிதாய் சிரித்தார் வள்ளிராஜன்.

என்ன? சிரிப்பு ரொம்ப பலமா இருக்கு வள்ளிராஜன் ? உங்கள தான் கார்த்தி தேடிட்டு இருக்கான்? ஏன் என்று திரும்பிய வள்ளிராஜனை தோள் பற்றியபடி மூன்றாம் காபி கோப்பையை எடுத்தது பவித்ரனே தான். பின்ன எங்க ட்ரீட் ?

அதானா இன்று ஈவ்னிங் ஆர் எஸ் ஆர் போகலாம். சரிதானே. ம். அப்புறம் இந்தப்புறம் ? சும்மாதான் உன்மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்தது அதான் வார்ன் பண்ணிட்டு போகலாம்னு.. ம்ஹீம் என்ன கம்ப்ளைண்ட் ? சிவில் டிஸ்ரபி. தான் மோகன்னு ஒருத்தர் . ஓ அதுவா விடுங்க அது நேத்தே கேஸ் முடிஞ்சது.. ஒரு பார்ட்டி கேன்வாஸ் தான் பண்ணேன்..

சரி அப்ப நான் கிளம்புறேன் ? பைதபை உன் பேரென்னனு சொல்லவேயில்ல . பாஸ் எனக்கு குடுத்த முதல் டிப்ஸ் இதான் . பேரு நிரஞ்சன். என்றன் நான். சரி பவி நான் வரேன் அப்ப ஈவ்னிங் ஆறு மணிக்கு ஆர் எஸ் ஆர்.  ல பாக்கலாம். நிரஞ்சன் நீயும் வந்துறு.

மாலை. திருவிழா போல் தினமொன்றும் குறைவிலா கூட்டநெரிசலுள்ள சாலையது .. கடைகள் எண்ணிடில் 25 தான் சில்லறை வணிகம் தள்ளுவண்டிக்கடை பானிப்பூரி பதார்த்தங்கள் என படுஜோரான தெருக்களின் சங்கமம் அந்த ரதவீதி அதன் முனைமருங்கில் ஆகுரிதியான கட்டடம் ஆர் எஸ் ஆர்.. சைனீஸ் நார்த் இன்டியன் வகையான பாஸ்ட்புட் கடை அது பல டேபிள்கள். 3 தந்தூரி பேன்கள் இன்னும் சில உணவுகலன்கள் ஏசி ரூம் கேபின்கள் தனித்தது.. ட்ரிங்க்ஸ் கேபினும் உண்டு.. நாங்கள் சென்றது ஏசி கேபின்.

என்ன வள்ளிராஜன் உங்க கேபின் பக்கத்துல தான? என்று விசிலினான். கார்த்தி.. வெங்கி நான் நிரஞ்சன் மற்றும். இது யாரு? என்றார் வள்ளிராஜன். இவன் தான் சென்னைல மாட்டி நீங்ககூட ரிக்வஸ்ட் பண்ணீங்களே ஹரீஷ். ஓ நீதானா அது ஏம்பா திறமைகாட்ட டிப்பார்ட்மெண்ட் தான் கிடைச்சதா?..

எல்லாம் சாப்பிட்டு கொண்டிருக்க வள்ளிராஜனுக்கு செல்லழைக்க.ஒரு நிமிடம் என்று போனவர் வர எட்டு நிமிடங்கள் ஆனது.. வந்தபின் முன்பிருந்த முகமில்லை. கொண்டாட்டத்தில் நாங்கள் கவனிக்கவில்லை. நிரஞ்சன் என்னிடம் குறிக்க. நான் வள்ளிராஜனை செய்கையில் வினவ. ஒரு நிமிடம் என்றது நான். வள்ளிராஜனும் நானும் பில் பே பண்ணிடரோம். வெங்கி நீ வீட்டுக்கா ஆபீஸ்க்கா?. வீட்டுக்குத்தான்.. சரி நீ வீட்டுக்கு போனதும் போன் பண்ணு. கார்த்தி நீ நிரஞ்சன கூட்டி போயிரு. ஹரீஷ் நீ வெளிய வரும்போது எனக்கு கால் பண்ணு என்ன பண்ணணும்னு சொல்றேன்..

வெளியே வந்து சொல்லுங்க வள்ளிராஜன். பி.சி கல்யாண மண்டபத்துல  ஒரு மர்டர் கேஸ் இன்னமும் எதும் கிடைக்கலனு.. சரி வாங்க போகலாம். கால் செய்த ஹரீஷுடன் வள்ளிராஜனின் ஸ்கார்பியோவில் சென்று பார்த்த போது.

மைகாட். வாட் அ க்ரூசியல் இத்தனை பேரா?.. இத்தனை குரூரமா? [கொடூரமான மரணங்களை தாங்குபவர் தொடர்ந்து படிக்கலாம் மற்றார் 4 பத்திகள் தாண்டிடவும்]

சுமார் 30 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வள்ளிராஜன் எப்போதோ வெளியே ஓடிவிட்டார். திருமண மண்டம் நிறைய பிணங்கள்.. ஏதேனும் சாதிக்கலவரமாக இருக்கலாம்.. ஆனால் இத்துனை குரூரம் அவர்களால் ஆகாத காரியம்..

வாசற்படியில் இருந்து 20 சுவடு தூரத்தில் ஒரு முப்பத்தைந்து வயதுக்கான ஆணுடல் ஆண்குறிக்கு மேலிருந்து சிரம்வரை இருண்டாய் பிரித்து உட்பிரிவுகள் தெரிய குடல் நுரையீரல் வெளிபட்டு கிடக்கிறான். அந்த இருக்கூறாய் பிரித்த விதம் பார்க்கையில். அர்த்தநாரியை பிரித்த பாவம் போல.. ச்சூ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அப்புறம் ஆண்டாள் பிரச்சனை ஆகிடும்.

வலதுபுறத்தே மார்பிலிரண்டு வாள்போன்ற கூரிய ஆயுதம் பாய்ச்சிய தடத்தில் இரத்தம் பீய்ச்சிட செங்குருதியில் நீந்திடக் கிடந்தான் . இடப்புறத்தே என்னே ஒருங்கு 8 உடல்கள் விதவிதமாய் வெட்டபட்டு மாற்றிமாற்றி ஒருங்கினைக்க பட்டுள்ளது . ஒரு பெண்ணின் மார்பகத்தை ஆணின் கால் கொண்டு ஒட்டபட்டுள்ளது. அந்த மார்பிள் தரையில் சிறிய செங்குருதிக் குளம். உறைந்திருக்க.

எதிர்புறம் திரும்பிட அய்யோ. அங்கங்கள் அறுபட்டு அக்கினியில் குளித்த என்கிறபடி ரத்தகசிவின் தீரத்தால் அறைவேக்காட்டு பெ்பர் தந்தூரி போல 9 பிணங்கள் 2 பெண்கள் 3 குழந்தைகள். 4 ஆடவர்கள்.எனசகிதம்.

மூலைத் தரையில் 9 பிணங்கள் சரமாரியாக வெட்டப்பட்டு துண்டுதுண்டாக. ஆறு பிய்ந்த பிஞ்சு கைளில். வெண்ணிற ரோஜாக்கள் தரைபடர்ந்த குருதியில் ஊறிட பாதிசிவந்த நிலை..

304 வள்ளிராஜனை வரசொல்லுங்க. நீங்க யாரு?. ப்ச்ச். யோவ்சொன்னத மட்டும் செய் என்ன கேள்விகேட்க சொல்லல.. ம் என்று முனகினபடி சென்றான்  முகிலசந்திரன் என்னும் 304. குலதெய்வத்தை வேண்டிருப்பார் வள்ளிராஜன். இருந்தும்.

அஞ்சி நடுங்கிட அரண்டு  புரண்டிட என்று கந்தசஷ்டி பாடியபடி வந்தார்.. இத்தனை குரூரம் தன் வாழ்நாளில் கண்டிருக்க வாய்ப்பில்லை ..

வள்ளிராஜன் எனக்கு இத ஒரு டீப் வீடியோ இல்ல 360 மாதிரி எதாவது.. வேணும். அப்புறம் இத க்ளியர் பண்ணிடுங்க. இன்ஸ்பெக்டர் யாரு? வஜ்ரவேல் தான். சரி அவர டீட்டைல் ஓட காலைல என்ன பாக்க சொல்லுங்க. முடிஞ்சா நீங்களும் வாங்க..

வள்ளிராஜன் தன் அதிகாரத்தின் செயல்பாட்டை பூர்த்தி செய்து ஆணைகள் பிறப்பித்து பின் நானும் ஹரீஸூம் வள்ளிராஜன் எங்கள வீட்ல விட்டுருங்க என்று ஸ்கார்பியோ நகர. வெங்கி கால் செய்திட. வெங்கி எங்கருக்க? வீட்டல தான்டா. நீ கார்த்தி வீட்டுக்கு வா.  நான் கார்த்திக்கு போன் செய்ய நிவேதா எடுத்து சொல்லுங்கண்ணா நான் ஒருத்தி இருப்பதையே மறந்துட்டீங்கள்ள. வீட்டுபக்கமே வரதில்ல. இப்ப அங்க தான் வரேன் நிவி. உன் காபிதான் குடிக்கணும்னு இன்றென் சாபம் . வாங்க வாங்க உப்பு போட்டு தரேன். நீ நல்லா குடுத்தாலே அப்படிதான் இருக்கும்...

இந்த கொடூரம் பாத்தும் எப்படி உன்னால சிரிக்க முடியுது பவி. என்றார் வள்ளிராஜன். வேலை வேற வாழ்க்கை வேறனு தெரிஞ்சதால.தான்.. நீ குடுத்து வெச்சவன்யா. நீங்களும் குடுத்து வைக்கலாம் ரைட்ல திரும்பி லெப்ட் போனால். நானெதுக்கு ?. ஹரீஷ் என்றபடி நான் இறங்கிட. எஸ்பி சார் . என் மாம்ஸ் சொன்னா காரணமிருக்கும். இன்ஸ்பெக்டர வரசொல்லுங்க.

மேலே காபியுடன் டேய் ஹரீஸ் நீ எப்ப வந்த? உனக்கு காபியில்லப்போ. ஏன் சிஸ்கா? பின்ன சீரியல் நடிக்க போனயே என்ன ஒரு வார்த்தை கேட்டியா? ரொமான்ஸ் டிப்ஸ் எல்லாம் சொல்லிருப்பேன்ல. யாருக்கு சீரியல் எடுத்தது எங்க மாம்ஸ் ஆச்சே ரொமான்சாவது. ?. போய் கேட்டா மிக்கினும் நன்று மிகையா தியானம். மக்கினும் நன்று தோலுடை காமம் னு சொல்லுவார்..

உனக்குமா?. சரிவா நாம கேசரி செய்யலாம். டேய் கார்த்தி நீயும் வரியா? ம்.. போ கார்த்தி.. ஆனா ஹரீஷ் நீயிரு உன்னால ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு. அதுமில்லாம அவங்க ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சி தான் கேசரி வரும் நீ போய் என்ன பண்ணப்போற.

வெங்கி வள்ளிராஜன் ஹரீஷ்.  கார்த்தி மேல ஹால் ப்ரீ தான. ஆமாண்ணா. ண்ணா காணவில்லை. இச் ஆனது போலும். வினையல் போர்டுகள் சூழவமைந்த தளமது. பேனர் காய வைக்க பயன்படுத்தப்படும் இடம். ஹரீஷ். லேப்டாப் நெட். வள்ளிராஜன் இன்பெக்டர் எங்க. வந்துட்டேன் என்று உள்நுழைந்தார்.

வாங்க இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல்.. நான் கேட்ட டீட்டைல்ஸ் எல்லாம்? இருக்கு மிஸ்டர்?. பவித்ரன் கலைச்செல்வன். ம் . ஹரீஸ் இந்த மண்டபத்த சுத்தியுள்ள கேமரா எல்லாமே ஆன்லைன். நீ என்டரன்ஸ் கேமராவ ஆட்டைய போடுறியா? . ம் ஓக்கே மாம்ஸ் . டே ஹரிஷு ஐபி மாஸ்க்க மறந்துடாதடா.. சரி மாம்ஸ்.. மிஸ்டர் வஜ்ரவேல். வேற எதாவது முன்விரோதம் சம்பந்தமா  விசாரிச்சீங்களா.. இல்லசார் இன்சிடெண்ட பாத்தவங்க யாருமில்ல . அண்ட பாத்தவங்க உயிரோடவும் இல்ல..

ம்..... ம்..ம் சரி நீங்க உட்காருங்க. வள்ளிராஜன் சர் நீங்க அவர்ட்ட பேசிட்டு இருங்க.. வெங்கி நம்ம போலாம். எங்கடா? டேய் ஹரிஷ பாக்கதான். சரி..

ஹரிஷ் எதாவது சிக்குச்சா?.. நத்திங் மாம்ஸ் எந்த விஷீவலும் சந்தேகபடுற மாதிரி இல்ல.. வெங்கி
நீ பாக்குறியா? ஒரு அனலைஸ். இல்ல இன்ஸ்பெக்டர் வரசொல்றியா?.

வாங்க வஜ்ரவேல் என்டரன்ஸ் கேமரா தவிர வேற கேமரா இருக்கா?. பேக் எட்ஜ் கிட்ட ஒரு வீடு அதுல வெளிய ஒரு கேமரா இருக்கு. இந்த சைட் பூராம் கவராகும்.. ஹரிஷ் . எதுக்கும் இருக்கட்டும்னு அதையும் சுட்டுட்டேன் மாம்ஸ்.. ஹரிஷ். வள்ளிராஜன் நீங்க இதுல எனி சஸ்பக்ட் பாருங்க..

வெங்கி நீயும் நானும். வஜ்ரவேல் எங்க அந்த வீடியோ. மொபைல்ல இருக்கா. ம் இருக்கு. குடுங்க.. கருமம்டா என்ன இப்புடி இருக்கு. கவனிடா. வீடியோவில் ஓரத்தில் ஒரு வீடியோ கேமரா இருந்தது.. மைகாட் how did you done it. வள்ளிராஜன் கேஸ் முடிஞ்சது வாங்க.  எப்படி மண்டபத்துக்குள்ள ஒரு வீடியோ கேமரா இருந்துருக்கு.. கமான் வஜ்ரவேல் அந்த கேமரா ரெக்கார்டிங் வேணும்.. சரி நான் ரெடி பண்றேன்..

இப்போது. கேசரி என்கிற பெயரில் பாயசமோ ரவைகஞ்சியோ என்று பெயரிட முடியாத ஒன்றை கார்த்தி கொண்டுவந்து தந்தான் . வெங்கி எடுத்துக்கவில்லை. இந்த அருவெறுப்பில் அவனுக்கு உணவு இறங்க வாய்பபில்லை.. நான் சாப்டலனா சண்டையாயிரும்.. விதி வலியது. என்றான் ஹரீஷ்..

மாம்ஸ் இங்க பாறேன் என்று அவன் ஸ்கிரீனில் காட்டியது துணிமப்ளரால் முகமறைத்த சற்றே வெளுத்த. ஈரசிமெண்ட் நிற சட்டையும் . ஜீன்ஸ் பாண்டும் அணிந்த 5.7 உயரமுள்ள ஒருவன். ஜன்னலைத் திறந்து அதாவது. ஆணிபிடுங்கும் கம்பியால் நெம்பி உடைத்து திறந்து 4.5 அடி உயரமுள்ள சுவற்றை தாண்டி உள்ளே சென்றான்..

வள்ளிராஜன் எதாதவது அடையாளம். இல்ல மார்ப்பிங் மாதிரி எதாவது பண்ணமுடியுமா?.. இல்ல அவன் பேஸ் சைட் கிடைக்கல. ம் தென் அந்த வீடியோ ரெக்கார்ட் வரவரைக்கும் காத்திருக்கலாம்.. என்றபடி சுழலும் நாற்காலியில் அமர்ந்தேன்.

நுழைவில் சங்கடமான சோதனைகள் தடுப்புகள் ஏதுமில்லையே ? யாரும் அந்தமாலை அவனை தனித்து கவனிக்கும் வாய்ப்புகள் இல்லையே? ஏனிந்த ஜன்னல் திறப்பு விவகாரம்.?.ஒருவேளை வாயிற்படி கேமிராவை கவனித்து இந்த கேமரா கண்படவில்லையோ?.  ஏகபட்ட கேள்விகள்.. கும்பகர்ணன் போருக்கு வந்தபோது ராமனின் கணையை "மொய்கணை "என்பார் கம்பர் . அதுபோல் மொய்க்கும் கேள்விகள்.. அடடா கம்பர் சொல்லிட்டேனா..

அசோகவனத்தில் சீதை தனித்த இரவின் தவிக்க. நிலவையும் இரவையும் எதிர்த்துக் கேட்டும் பாடல்..

கல்லா மதியே கதிர்வாள் நிலவே
செல்லா இரவே சிறுகா இருளே
எல்லா மெனையே முனிவீர்  -அழகு
வில்லா ளனைச்சென்று முனித்தி லீரோ.

டேய் கொஞ்சம் கேஸ் பத்தியும் பாருடா.. என்றான் வெங்கி. அவ்வளவுதானே..

கல்லா களவே கதிர்வாள் கேஸே
நில்லா இறப்பே நெருங்கா தீர்வே
எல்லா மெனையே இம்சிப்பீர் வேறு
நல்லா ளனையின்னும் கண்டறிந்தி லீரோ.

மாம்ஸ் இந்த சூழ்நிலையிலும் உனக்கு எப்படி கவிதை படிக்க முடியுதோ என்றது ஹரிஷ்  . . டேய் கவிதைங்கிறது ஒரு அனுபவம் தான்.. ரூட் மேப் மாதிரி..

உங்க அனுபவம் இருக்கட்டும் இந்த அலுவலுக்கு வா பவி.. என்றார் வள்ளிராஜன்.. ஒருத்தன நிம்மதியா கவிதைக்க விடமாட்டீங்களே... இருங்க அந்த கேசட்டும் வரட்டும் ஒரு சின்ன பிக்ஷன் தோணுது.. இதெல்லாம் எங்கையோ பாத்த மாதிரி படத்திலயோ அனிமஷன்லயோ காமிக்லயோ.. சரியா தெரியல ஆனா இன்ச் பை இன்ச் பாத்துருக்கேன்.. வக்கீல் சார் உனக்கு எதாவது.. எனக்கும் எங்கயோ பாத்தமாதிரி இருக்குடா..

ம். வள்ளிராஜன் உங்க அதிகாரத்த வெச்சி எனக்கு ஒருத்தன அழைச்சு வரமுடியுமா அரஸ்ட் இல்லாம சும்மா ரெப்பரன்ஸ்க்கு.. ம் சொல்லு பவி யார வரவழைக்கனும்.. டாக்டர் செல்வகுமார்.. சைக்காலஜிஸ்ட். ம் வரசொல்றேன்.. என்று அருகிருந்த அறைக்கு டெலிபோன் செய்யப்போனார் வள்ளிராஜன்..

நான் கையிலிருந்த ஆறுமுக அந்தாதியை பிரித்து பார்த்தேன்.. டேய் கார்த்தி நீ இதெல்லாம் படிப்பியா? இல்லண்ணா எனக்கு ஒருத்தர் கிப்ட் பண்ணது.. உனக்கு போய் இத கிப்ட் பண்ணார்பாரு அவர அரஸ்ட் பண்ணி ரிமாண்ட்ல வெக்கனும்.. பாவம் வாலிசார் நல்ல மனுசன்.. எனக்கு மானசீக குரு..

மாம்ஸ் இங்கவாயேன்.. எனக்கு ஒரு இன்ஸ்டிங்க் ... புரியுது ஹரிஷ் நீ விமல வரசொல்லு..  நான் அதுவரை ஆறுமுக அந்தாதி படிக்கிறேன்.. கார்த்தி நீ நிவேதாவ போய் பாரு.. வெங்கி கொஞ்சம் அவே. ம் .. ஹரிஷ் நீயும்.. சரி நான் நிவேதா கிட்டபோய் கலாய்க்கிறேன் .. கேட்டா போக்கிமான் கோ விளையாண்டேன் இங்க வரசொன்னுச்சினு சொல்றேன்..

என்ன சொன்ன?.. போக்கிமான் கோ.. எஸ் எஸ் ஐ காட் இட்..

இங்கனம் இவ்விடம் வந்தாய் இன்பமே
எங்கனம் எவ்விடம் சென்றும் எவ்வமே
எங்களுளம் திங்களொளி தந்தாய் இன்பமே
எம்மையாட்டி எம்முள்வாழ் ஏகனே இறைவனே...

உன் கவிதைக்கு அளவே இல்லையா பவி.. இருக்கே நாற்சீர் நான்கடி.. என்ன வள்ளிராஜன். செல்வகுமார் எங்க? அவர் அவைலபிள் இல்ல பவி . ஏதோ செமினார்க்கு சிங்கப்பூர் சென்றிருக்கார். ம் குட் .. என்ன சொல்ற என்றான் வெங்கி. கேஸ் முடிஞ்சதுனு சொல்றேன்.. எப்படிடா.. போக்கிமான் கோ அதனால.. டேய் விசயத்த சொல்லு...

ம் சொல்றேன் இரு.. சிந்தையில் சிலகாதம் நடையில் பல்நூறுகாதம்.. என்பது ஒரு பழமொழி.. அறிவின் ஆற்றலில் ஒரு பங்கு உடலாற்றலில் நூறுபங்குக்கு சமம். அப்படி சிந்தனையோடு நடந்தபடி இருந்தேன். எல்லோரும் என்னை வெறித்துபார்க்க.. எதுவும் தோன்றாமல் கொள்கைனு கேட்டதுமே ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு மாதிரி தலையே சுத்திருச்சு..

எந்தையே எம்பிரானே ஏதேனும் வாய்க்குமோ
இந்தடியேன் தானுய்ய ஒன்று.
(குறள் வெண்பா )

கார்த்தி ... ம் இன்னொரு காபி அதானே அண்ணா.. நீ ஏலகயவன்டா. .. காபிக்கு தான் நானிருக்கேனே என்றுவந்தான் நிரஞ்சன்.. வாடா நிரஞ்சா.. கண்ணன் என் சேவகன் மாதிரி உனக்கு நிரஞ்சன் என் சேவகன் எழுதனும்டா..

நிவே நற்குழம்பி செய்முறை இவன்ட கத்துக்கோ.. நற்குழம்பி ரசனைய இவன்கிட்ட கத்துக்கோ நிவே என்றபடி உள்நுழைந்தார் சாமி..

வாங்க சாமி.. என்ன இந்தபக்கம்.?. சும்மாதான் மதன் உன்ன வரசொல்ல சொன்னான். இப்பவா? இல்ல நாளை மறுநாள் சென்னை மயிகாப்பூர் .. அது மயிலாப்பூர் தானே என்றது கார்த்தி.. இந்த காப்பி பைத்தியத்துக்கு அது மயிகாப்பூர். என்ற பேச்சுக்கள் வள்ளிராஜனை எரிச்சலூட்டியது உண்மை அவர் நல்ல நடிகர்.

பேச்சிடையே நிரஞ்ச குழம்பி (நிரஞ்சன் காபி) வந்தது.

சாமி ஒரு பத்து நிமிசம். ஒரு கேஸ் எதாச்சும் இன்ஸ்டிங் இருந்தா சொல்லுங்க.. ம்.. வெங்கி கார்த்தி ஹரிஷ் வள்ளிராஜன் நிரஞ்சன் என கான்பரன்ஸ் ஆனது. அறை. இன்னிக்கி சாயந்திரம் அதாவது 7-8 ல அந்த மண்டபத்துல ஒரு மிகமிக கொடூரமான கொலைகள் நடந்திருக்கு.. எங்கயோ பாத்த மாதிரி இருந்தது எனக்கும் வெங்கிக்கும். சீன்பைசீன் சொல்லியாச்சு. விசயம் என்னனா பாத்தது கேம்ல.. இங்கதான் கேஸ் இடம் மாறுது சிக்கலாகுது. விமல். ஹரிஸ் விமல் எங்க போன் பண்ணா எடுக்கல மாம்ஸ். 

கால் விமல் என்று கூகுள் வாய்ஸ் இன்புட்டிட. ரிங்கியது.. ஹலோ விமல்.  விமல் இல்லப்பா 4ரோட் சிக்னல் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன் அவன் லைசன்ஸ் இல்லாம வண்டி மாட்டிருக்கு.. ம் சர் அப்படியே விமல்கிட்ட குடுங்க கொஞ்சம் முக்கியமான விசயம்.. அதெல்லாம் தரமுடியாது எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்க.. டேய். உனக்கு வேண்டியது காசுதான ****** *** போன அவன்ட குடு  .. டேய் போலீஸ்காரனயே திட்டுறியா நீ.. டேய் மூ-***  போன குடுத்துரு . இல்ல ஐபில போட்டு 53 பேர் ஓயாம திட்டுவான் .. டேய் தரமுடியாதுடா என்பண்ணனுமோ பண்ணிக்கோடா..

பவி இரு.. ஹலோ நான் க்ரைம் எஸ்பி வள்ளிராஜன் பேசுறேன்.. ஐயா சொல்லுங்க ஐயா.. போன அந்த பையன்ட்ட குடு   அவனவுட்டுரு.. இல்லங்கையா எஸ் ஐ தான்.. யாரு சரவணனா இரு நாளைக்கு அவன சஸ்பெண்ட் பண்ணிறேன் உனக்கும் தான்  பேர சொல்லு. ஐயா விட்டுறேன் ஐயா. ஏ அந்த பேக் மாட்டுன பையன வரசொல்லு.. ஹலோ விமல் பவி. ம் சொல்லு பவி.. கொஞ்சம் வரனுமே . எங்க? கார்த்தி வீட்டுக்கு. இல்ல பவி இங்க வண்டிய புடிச்சி வெச்சிருக்காங்க.. இல்ல விமல் விட சொல்லிருக்கு.. அவங்க ஆபிசர்ட பேசிட்டேன் வண்டிவாங்கிட்டு வந்துசேரு.. கொஞ்சம் முக்கியமான விசயம்.. ம் சரி பவி..

நிவே நீ இங்கயா இருக்க டேய் சொல்லமாட்டியா?.. ம் நீங்க இப்படி பேசுவீங்கனு இப்பதான்ணா தெரியும்.. சாரி நிவே சம் டெம்பர்ஸ்..

சட்டென்று.. வள்ளிராஜன் இந்த வருசம் வஜ்ரவேல் குடும்பத்தார்க்கு பதக்கம் தருவது போல ஒரு காட்சி வந்து போனது..

எங்கள் உயிர்சோதி நீயுமுள்ளே வீற்றிடும்
செங்கன் திருப்பர மே.
(குறள் வெண்பா)

ஹரிஷ் உடனே வஜ்ரவேல் லோகேஷன் பிடி.. வள்ளிராஜன் உடனே கன்ட்ரோல் ரூம்ல சொல்லி வஜ்ரவேலயும் விமலயும் அரஸ்ட் பண்ணி கொண்டு வர சொல்லுங்க சூன்.. அந்த கேசட் முக்கியம்..

ஏன் ...என்னனு புரியல பவி கொஞ்சம் தெளிவா.. சார் இது மொத்தமும் முட்டாள்தனமா கூட போகலாம்.  பட் ப்ளீஸ் செய்ங்க.. அவன் சொன்னா ஏதோ விசயம் இருக்கும் செய்ங்க வள்ளிராஜன்.. என்றார் சாமி..

மாம்ஸ் விமல்இன்னும் 4 ரோட்ஸ் தான். வஜ்ரவேல் ஸ்டேடியம் ரோட் பக்கம் தான் புடிச்சிரலாம்.

வள்ளிராஜன் டாக்டர் என்ன சொன்னீங்க?.. சேமினார்க்கு சிங்கப்பூர்னு. ம்.. என் கணிப்பு சரிண்ணா. இன்னும் 3....2.....1..... எஸ். ஹரிஷ் வஜ்ரவேல் சுத்தியிருக்குற மொத்த கேமிராவும் தூக்கு.. மானிட்டர் பண்ணு. நிரஞ் ஹவ் எ வியூ..  ஹரிஷ் வஐ்ரவேல் சுத்தியிருக்குற அத்தன மொபைல் ஐஎம்ஐ எடு..

பவி நீ செய்றது ஒன்னும் புரியல என்றார் வள்ளிராஜனும் வெங்கியும்.. சிம்பிள் வள்ளிராஜன் நீங்க டாக்டர் செல்வகுமார் ப்ளைட் டீட்டைல் புடிங்க எனக்கு அந்த ஆளு போனாரானு தெரியனும்.

வெங்கிக்கு புரிந்திருக்கும்.. கார்த்தி க்ளீனிக்ல விசாரி டாக்டர் இன்னைக்கு கண்டிப்பா பாக்குறேன் சொன்னாரு சொல்லு..

சாமி என்ன யோசனை ?.. எனக்கு இப்ப ஒன்னு தோணுது.. தோணட்டும் லிஸ்ட்ல வைங்க.. ஏன்டா ..?.. டைம் வேற சார்..

மாம்ஸ் எல்லா மொபைலும் லிஸ்ட் பண்ணிட்டேன். ஒன்னு மட்டும் மொபைல்னு காட்டுது லிஸ்ட் ஆகல.. பேஷ் பேஷ்  இததான் எதிர்பார்த்தேன்.. ஹரிஷ் உன்னால லோகேஷன் சொல்லமுடியுமா இந்த மொபைலோட. முடியும் மாம்ஸ் பட் அக்குரிட்டா ஆகாது எனக்கு அது தெரியாது.. தெரிஞ்சுக்க..

எப்படி மாம்ஸ்... வள்ளிராஜன் கொஞ்சம்.   நீங்க இருக்குறது வசதியா போச்சு.. ஹரிஷ்.. உன் மொபைல் தா..

சிக்னோ சப்ளையர். ல உன் மொபைல கனெக்ட் பண்ணு.. அந்த லிஸ்ட் ஆகாத மொபைல்க்கு ரிமோட் சிக்னல் குடு.. பைப்பாஸ் ஆப்ஷன்ல இன்டர்சேஞ்ச்..குடு தட்ஸ் இட்..

ம்.. இந்த கமண்ட் ப்ராம்ட்ல ..

Ping :
அந்த  மொபைல் ஐபி
100.udi789.365.907
இப்ப ஆல்டர் சேஞ்ச் ல உன் ஐபி.

Ping alter:
Ping alter change:
111.222.333.00.789
அவ்வளவு தான்.. இன்னும் 20 நிமிசத்துக்கு உன் ஐபி அவன் லோகேஷன்ல..
சூப்பர் மாம்ஸ்,|இத எங்க படிச்ச?... ஹைப்போ தீட்டிகள் ஹாக்கர்ஸ் ல..

வள்ளிராஜன் .. இந்த ஆள் எனக்கு வேணும்.. அரஸ்டட்ல .. இந்த கேஸ்ல டைரக்ட் ஆர் இன்டைரக்ட் கிர்மினல்.. புடிச்சர்லாம் தான...

ம் நிச்சயம் பவி அவன விடுறதா?..  ஹலோ கன்ட்ரோல் ரூம். எஸ்பி வள்ளிராஜன் ஹியர்.. என்று வள்ளிராஜன் ஆணைபிறப்பித்து பிடித்தது ஒருவிதத்தில் நன்றாய் போனது ...

ஒருவேளை விட்டுருந்தா வள்ளிராஜன் இந்த வருசம் வஜ்ரவேல் குடும்பத்தார்கிட்ட பதக்கம் குடுத்துருப்பீங்க இல்ல... இன்க்ரீடபிள் கெஸ் பவி.. சாமி இப்ப சொல்லுங்க தோணுனதை..

பவி உண்மைய செல்லு வந்தவன் வஜ்ரவேலுக்காக மட்டும் தான் வந்துருப்பான்னு நினைக்கிறியா?.. இதுதானா சாமி.. எனக்கு அப்பவே தெரியும்  வந்தவன் வஜ்ரவேலுக்காக இல்ல.. இதோ இந்த மடையன்  விமல்க்காக. என்ன?.. ஆமாம் சாமி வஜ்ரவேல்கிட்ட இருந்தது வெறும் கேசட் அதவெச்சி நாம கொலையாளி பிடிக்கமுடியாதுனு அவங்களுக்கும் தெரியும்..

சரி விமல்கிட்ட அப்படி எதும் இல்லயே.. இவன்கிட்ட ஒரு விசயம் இருக்க கான்பரன்ஸ் ஆகுங்க சொல்றேன்..

அந்த அறை மீண்டும் கான்ப்ரன்ஸ் ஹாலானது. விமல் எனக்கு ஒரு இன்டிங்க்ட்.. இத்தனை குரூரமான கொலைகள் நார்மல் பர்சனால சாத்தியமில்ல. சோ

கேஸ் 1
     கொலையாளி சைக்கிக்.
அப்ப அவன் சைகிக் ஆக ஒரு ரீசன் இருக்கனும் ரிலேட்டட் டூதிஸ் மேரேஜ் இல்ல இந்த கொலையானவங்க மேல தீரா கோபம்.

கேஸ் 2

கொலையாளி சைகிக். சைக்கிக் ட்ரீட்மெண்ட்ல இருந்து வந்துருக்கனும். இருந்திருந்தா எந்த க்ளீனிக்? எந்த சைக்காலஜிட்..

ம்.. பவி நான் ஒன்னு சொல்லட்டுமா? என்றான் விமல். சொல்றதுக்கு தான வரவெச்சேன் . ஒரு காபி வேணும் மதியமே சாப்டல.. நிரஞ் காபி. நிவே அந்த ரவகஞ்சி இருக்குல்ல.. அண்ணா கேசரிண்ணா.. அது உனக்கும் கார்த்திக்கும்..

காபியை விழுங்கி கேசரியை மடக்குகளாய் குடித்தான்.. 

இப்ப சொல்லு.. ப்பா இப்பதான் நிம்மதி . அரஸ்ட் ஆன உடனே களிக்கு போயிருவேனோனு பயந்துட்டேன்.. பவி விசயம் என்னனா?.. ஒரு சைகிக் அவங்களோட ஆக்டிவிடிஸ் வெச்சி எந்த மாதிரினு பிரிக்கனும் அதுபடி அவங்க சூழல். பழக்கம்னு பிரிக்கலாம்..

இவன் கேம் சைக்கோ.. கேம் சைக்கோவா என்று அனைவரும் என்னை பார்க்க.. விமல் சொல்லு கேம் சைக்கோ எப்படினு.. டேய் அத சைக்கோலயே சேர்த்த முடியாது. வெறும் ஒருமணி நேரத்துக்கு எதுவும் தோணாம போதைல இருக்குற மாதிரி இருக்கும்.. விமல் ஐம் சீரியஸ். சீரியஸா இதான் கேம் சைக்கோ. . விமல் கேம்சம்பந்த பட்ட வேற எதாவது சைக்கோ இருக்கா யோசிச்சு சொல்லு..

கேம் சம்பந்தபட்டதுனு எதுவும் இல்ல சொல்லபோனா பேன்டசினு ஒரு சைகிக் இருக்கு. அது இந்த ஏலைஸ் இன் வொன்டர்லேண்ட் மாதிரி ஒரு சின்ன இடத்துல மாட்டிகிட்டு வேறஉலகத்துக்கு போனமாதிரி கற்பனைல இருப்பாங்க.

வஜ்ரவேல் கேசட் எங்க.. இருக்கு சார் ஆனா கேமரா ரன் ஆகவேயில்ல.. நீங்க கேசட்ட பாத்தீங்களா? இல்லசார்.. அப்புறம்?... போய் கேசட்ட ப்ளே பண்ணுங்க வஜ்ரவேல்..ம் சரிங்க ..

விமல் ஒருவேளை ஒரு நர்மல் பர்சன சைக்கோவா மாத்தமுடியுமா? .. ம் முடியும் பவி பை தபை டாக்டர்ஸ் நினைச்சா. ஆனா அவங்க அப்படி செய்யமாட்டாங்க.. சரி அப்படி செய்யறதா இருந்தா இந்த ஊர்ல எந்த டாக்டர்களால முடியும்.. ?.. ம் ரெண்டு பேர் இருக்காங்க.. டாக்டர் வைத்தியலிங்கம் சீனியர் மோஸ்ட் சைக்கார்டிஸ்ட் இன்னொருத்தர் செல்வகுமார்... தட்ஸ் இட்..

வள்ளிராஜன் டாக்டர் செல்வகுமாரோட போயிங் டீட்டைல்ஸ் என்னாச்சு ?. கொண்டுவர சொல்லிருக்கேன்.. இப்ப அரஸ்ட் பண்ண அந்த ஆள் யாருனு தெரிஞ்சதா?. ஓ எஸ் பிலானி ஆப்கான் ஆள்.. என்றார் வஜ்ரவேல்.. பொய் . மேல சொல்லுங்க.. எப்படி பொய்னு சொல்ற ஒரு சீரியஸான காரணத்துக்கு வந்துட்டு அவன் சொந்த அட்ரஸ் சொல்லுவான்னு நம்புறீங்களா வஐ்ரவேல்.. ம் நாட்பீ சர்.

ஓக்கே எல்லோரும் கேளுங்க.. இது ஒரு சின்ன முடிவுதான்.. இது கற்பனைதான்.. உண்மையாவும் இருக்கலாம்.. மண்டபத்துல கொலைசெய்யபட்ட யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரிலேடட் இல்ல . கொலையாளி சைக்கிக். பட் ஹீவாஸ் மேட் சோ. விமல் சொன்னதுபடி பாத்தா கேம் சம்பந்தமா எந்த சைக்கிக் வியாதியும் இல்ல..
சராசரி மனிதன் இத்தனை கொடூரம் செய்யமுடியாது.. அண்ட் எனக்கும் வெங்கிக்கும் இத எங்கையோ பாத்தமாதிரி இருந்தது.. அது ஒரு கேம்ல தான்.. ஆக யாரோ இவன கேம் சார்ந்த மனவியாதிக்குட்பட வெச்சிருக்காங்க..

அப்படி செய்யகூடிய ஆட்கள் இங்க ரெண்டு பேர்தான் டாக்டர் வைத்தியலிங்கம் டாக்டர் செல்வகுமார். டாக்டர் செல்வகுமார் ஊர்ல இல்ல..ங்கிறது பொய்னு வெச்சிக்கிட்டா. ஹீ இஸ் பேக்போன் டூத க்ரைம். அதே சமயம் வைத்தியலிங்கத்தையும் ஒரு கண்ணு வெச்சிக்கணும்..

என் கணிப்பு சரினா .. இதே நேரத்துல இன்னொரு கொடுரம் நடந்துட்டு இருக்கும்.. வெங்கி கேம் படி இதுக்கு அடுத்த சீன் என்ன?... கேம் எதுனே தெரியாதுடா.. டேய் இந்த கொடூரம்லாம் காட் ஆப் வார்ல தான.. ம் ஆமாமா..

கேசட் எடுத்து பாத்துறலாம்டா.. ஹரிஸ் ஸ்டோரி போர்ட் மட்டும் பாரு.. வள்ளிராஜன் செல்வகுமார் போயிங் ரிப்போர்ட்.? இதோ கேட்டுதரேன்.. கார்த்தி நீபோன் பண்ணியே.. ?.. அட்ரஸ் குடுத்துருக்காங்க அண்ணா ரெண்டு மணிநேரங்கழிச்சி பாக்கலாம்னு.. வாட்.?.. வஜ்ரவேல் இந்த டைம்ல ஏதாச்சும் ப்ளைட் ரிட்டன் இருக்கா பாருங்க?.. நிச்சயமா தெரியும் இல்ல சார்.. தட்ஸ் இட்.. வள்ளிராஜன் இல்ல நீங்க இருங்க. வஜ்ரவேல் நீங்களே ஸ்ரிப்ட் ரெடி பண்ணி அரஸ்ட் ஹிம்.. முக்கியமான விசயம் அவர் உங்கள கொல்ல முயற்சிக்கலாம்..

எப்படியோ செல்வகுமாரை கைது செய்து விசாரித்த போது.. சோமாளியாவின் மர்ம கும்பல் ஒன்று நிதியளித்து செல்வகுமாரை இது போல் செய்திட் வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவது என்பது அவர்களது திட்டம்.. என தெரிந்தது..

வஜ்ரவேல் முடிஞ்ச வரைக்கும் எல்லா டீட்டைலும் விடியறதுக்குள்ள கறந்துடுங்க விடியும் போது அவர் இருக்கமாட்டார்.. எப்படி சொல்றீங்க பவி.. எத்தன சினிமா வந்துருக்கு என்ன நடக்கும்னு தெரியாதா? ...

எப்படியோ போராடி அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்து மனநல மருத்துவமனைக்கு சேர்த்தார்கள் .. ஆனால் செல்வகுமார் உருவாக்கியது 52 பேராம்.. அதுமட்டுமின்றி செல்வகுமார் மட்டுமல்ல வெளிநாட்டு மனநல மருத்துவர்களும் இப்பணியை செவ்வன செய்கிறார்களாம்..

மக்களே எச்சரிக்கையோடு இருங்கள்.. சந்தேகிக்கும் படி யாரேனும் இருந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் .. என்று பேட்டியளித்தார் வள்ளிராஜன்.. கார்த்தி சொன்னான் எப்படியோ சோமாளியர்களின் தேவை பூர்த்தியாகிவிட்டது .. மக்களிடம் அச்சத்தை விளைவிப்பதே அவ்கள் எண்ணமா இருந்துருக்கும். அதெப்படி அதெல்லாம் இல்ல என்றான் ஹரிஸ் இப்படியாக அவர்கள் வாதம் நீடிக்க நிவேதாவின் மதியஉணவால் விவாதம் ஓய்ந்தது..

ஆனா விமல் சோமாளியாவுல இவ்வளவு பணம் இருக்காதுதான.. வேறயாராவது உதவுறாங்கனு நினைக்கிறேன்.. .. எதுக்கும் விமல் நீ ஜாக்கரதையா இரு எனக்கென்னமோ அடுத்த ஆப்ரேஷன்ல நீதான் சைக்கோவா இருப்பனு தோணுது..

டேய் எவ்வளவு சீரியஸ் பிரச்சனை போய்ட்டு இருக்கு.. நீ கேசுவலா இருக்க என்று கொதித்தான் வெங்கி.. டேய் கேஸ் முடிஞ்சது இனி போலீஸோ சி.பி.ஐ. யோ பாத்துக்கும். நம்ம வேல அவ்வளவுதான்.. டேய் அந்த பிரச்சன இல்லடா.. நிவேதா செஞ்சது சாம்பாரா? புளிக்குழம்பா? னுதான் பிரச்சன..

இதுக்கு எல்லாமாடா வக்கிலும் டிடெக்டிவும் வேணும்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post