கடல் என்பதென்ன... நதிகளின் கூட்டுகுடும்பம்
மலை என்பதென்ன... பாறைகளில் ஒற்றுமை
மனம் என்பதென்ன... உணர்வுகளின் உறைவிடம்
மேகம் என்பதென்ன... நீரின் பயணியர் மாளிகை
பிரபஞ்சம் என்பதென்ன.... பிரளயத்தின் விகுதி
ஞானம் என்பதென்ன... அறிதலின் ஆற்றல்
உலகம் என்பதென்ன... உனது சூழல்
உண்மை என்பதென்ன.. எனது உறைவிடம்
சினம் என்பதென்ன.... குணத்தின் திரிநிலை
பாவம் என்பதென்ன.... செய்ய தகாதவை
பயம் என்பதென்ன... அறியாமையின் உணர்வு
எனக்காய் இறைவன் சொன்ன பதில்கள்...‪#‎எனக்கும்_ஒரு_கீதோபதேசம்‬.