காளமேகன் போல

மதந்தடுக்கு மோநமருங் காதலை நின்றன்
மதந்தடுக்கு மேயாயின் என்றன் மனமது
மாறும் மதமதும் மாறும் எழிலேயாவும்
மாறுமே காளமேகன் போலவே யானுமே..
(இது நானு எழுதினது )




(முதலிரு அடிகள் காளமேக புலவர். பின்னிரு அடிகள். அடியேன் பவித்ரனே)
நல்லதொரு புதுமை நாட்டில்கண்   டேன்அதனை
சொல்லவா? சொல்லவா? சொல்லவா? - தொல்லை
புதியஇந்தி யாத்தன்னை மோடியுமே பெற்றார்
அதிகப்ப ணத்ததிபர்  கொண்டு..



சட்டியிலே பாதிஅந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் தில்பாதி இட்டுஇருக்க - திட்டமுடன்
வாரிசுருள் வாதிகள் அள்ளிவிட மக்கள்
நாரிநொந்த தென்ன உரை..



முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க
பின்னே இருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேகமது போகுமோ முன்னேறி இத்தேசம்
மாகமாது போகுமோ போ..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post