கவிப்போம் பத்து

சந்தங்கள் ஒன்றிட சொந்தங்கள் ஆகினோம்
பந்தங்கள் செய்திங்கு பந்தங்கள் ஆகினோம்
விந்தைகள் கற்றிங்கு வித்தகர் ஆகினோம்
சிந்தை யதனில் சிறந்து ... 1

சிறந்து பிறந்த மொழியிலே நாமும்
கறந்தநற் பாலொடு தேனாய் வெளியில்
பறந்து விரிந்திட பார்புகழ் கொள்ள
திறந்தவெளி யிதுவும் தெளிவு... 2

தெளிவுற செய்தமே சிந்தை சிறகை
வெளியுற செய்தமே விந்தை கருத்தை
களியுற சொன்னமே அந்தை அறிவை
வளியுற செய்தோம் மகிழ்ந்து. 3

மகிழ்ந்து இசைந்து புனைந்த பலபா
நெகிழ்ந்து உளமது உறைந்த பலாக்கள்
முகிலினில் சேர்ந்து முயங்கினம் யாமும்
பகிரியில் சிந்தினம் சிந்து. 4

சிந்தும் சிறக்கும் புதுக்கவிதை மணக்குமே
முந்து தமிழில் புதுமை பிறக்குமே
சந்த குழிப்புடன் வண்ணப்பா யாவுமே
தந்த கவிப்போம் உயர்வு. 5

உயர்வுள் மனங்கள் உடனிருக்க போதுமே
உயவின்றி இன்பம் உளத்திற் நிறையுமே
தயவுள் மனங்கள் தயாளம் புரிகும்
நயமுள் கவிப்போம் தலை. 6

தலைப்புகள் தந்திங்கு தழைக்கும் கவிஞர்
தலைக்கு மகுடிட்டு கைதட்டும் சுற்றமே
தலைப்பட்டால் தானாய் துணைவரும் கொற்றமே
தலைக்கணம் இல்லா உறவு.. 7

உறவுள் பிழைகளேது உள்ளங்கள் பிணைந்து
திறந்த சிறப்பும் பரந்த உளமும்
வறண்ட தருணத்து ஊற்று யிவையே
அறமென கொண்ட திருத்து .. 8

திருத்தங்கள் செய்கும் திறனோர் பலரே
விருத்தங்கள் செய்ய விழைவோர் தமக்கு
வருத்தங்கள் நீக்கி வகுப்பு வழங்கும்
மருத்துவர் பலரும் உளர்... 9

உளருள் அனைவரும் ஒன்றே உறவே
களமுள் அனைவரும் வேழமே வேந்தே
வளமுள் திறனதில் யாவரும் ஒன்றே
உளமாற இஃதென் முடிபு... 10


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post