சுஜாதா

நூலகமெல்லாம் இந்த நூதனனாலே நிறைவடையும்..
பாலகம் முதல் பிரதமர்வரை விமர்சித்தும்
கலகம் இன்றி காப்பாற்றும் திறமை.
பலமாய் இருந்தது பால்யத்து ஸ்ரீரங்கன்
பெல்லின் ஆஸ்தானன் பெங்களூரின் சகோதரன்
டெல்லும் டெலிபோனாய் டிங்டாங் கதையாளன்

செல்லமாய் கொண்டாடும் சினிமாக்கள் இவரை.
வெல்லமாய் நினைத்த எழுத்தாளர் பலரை
மெல்லமாய் வென்ற மகிமைகள் நூறு
சில்லென வாகும் சுஜாதாயெனும் பேரு..



கொலையுதிர் காலத்தில் கொலை அரங்கத்தில்
மலைமாளிகையில் மாதர்தம்மில் அனாமிகாவில்
நடுபகல் மரணம் நிர்வாண நகரத்தில்
மேகத்தை துரத்தினவன் உள்ளம் துறந்தவன்
விபரீத கோட்பாட்டை விஞ்ஞான பார்வையிலிருந்து
உயிர் முதல் ஜீனோம் தலைமை செயலகமென
24 ரூபாய் தீவில் கடவுள் இருக்கிறாரா?

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post