நெஞ்செல்லாம் நெறஞ்சிருக்கா

 நெஞ்செல்லாம் நெறஞ்சிருக்கா நெல்லாத்தான் வௌஞ்சிருக்கா

பஞ்சாத்தான் நானிருந்தேன் பாதகத்தி கொளுத்திபுட்டா

பஞ்சத்தில் படும்பாட்ட பசுமையில கொடுத்துபுட்டா

கெஞ்சாத கொறையாத்தான் கிறுக்காநான் அலையிறனே..  1


நறுக்குன்னு வெட்டிபுட்டா நரியாட்டம் தந்திரமா

சுறுக்குன்னு குத்தாம சூசகமா கொன்னுபுட்டா

முறுக்கித்தான் திரிஞ்சேன்டா மிடுக்கெல்லாம் போச்சேடா

சிறுக்கித்தான் என்மனச செலதுண்டா பிரிச்சாளே.. 2


பருப்பாத்தான் கடைஞ்சிட்டா பழசெல்லாம் மறந்தேன்டா

நெருப்பாட்டம் கொதிக்கிறேனே நெனப்பெல்லாம் எரிச்சிட்டா

மருவாத கொடுத்தாலும் மனசுக்கு பிடிக்கலயே

கருவாடா ஆனேன்டா கருவாச்சி அவளாலே.. 3


கள்ளூரூ கண்ணழகி கண்பட்ட நோவுக்கு

உள்ளூரு வைத்தியந்தான் உதவாது போனானே

முள்ளொண்ணு குத்தித்தான் மலையொன்னு சாஞ்சதடா

மெள்ளத்தான் மினுக்கியவ மென்னுத்தான் போனாளே.. 4


நெனச்சாலே நாக்கூறும் நம்மாத்து தண்ணியுந்தான்

நெனச்சாலே கசக்குதடா நெத்திலியும் புளிக்குதடா

மனசால வஞ்சத்த மவதானே செஞ்சிட்டா

வனசோலை எல்லாமே வாடித்தான் போயிடுச்சே. 5


அழுக்கான துணிமாட்டி அஞ்சாறு நாள்திரிவேன்

முழுசாதான் மாத்திபுட்டா மொகங்கூட மாறிடுச்சே

வழுக்குமர வழுக்கும்படி வழுக்குதடா சிரிச்சநொடி

கொழுப்பால கொழுத்தவதான் கொன்னுபோட்ட அந்தநொடி.. 6


பிடிசோறும் எறங்கலயே பழச்சாறு பிடிக்கலயே

அடிச்சாலும் வலிக்கலயே அவவாசம் மறக்கலயே

முடிச்சிதான் போட்டுபுடும் முடிவுக்கு வந்தேன்டா

இடிவிழுந்த பனையாட்டம் இளமனசு ஆனதாலே.. 7


ராவெல்லாம் ரணமாச்சு ரவபார்வ ரொணமாச்சு

சேவல்தான் கூவயில சேராத சுருதியாச்சு

மாவெல்லாம் மழையால வீணான கதையத்தான்

ராவெல்லாம் வீணாச்சு ரவிக்ககாரி நெனப்பாலே.. 8


மருந்தொன்னு இல்லனு மகமாயி கோயிலுக்கு

கரும்பொன்னு நேந்துகிட்டு கருப்பாயி கும்பிடுறா

விரும்பித்தான் வந்தவென வெண்ணீரா கொதிக்குதடா

துரும்பாத்தான் போனேன்டா தொல்லயிது தாங்கலயே.. 9


அழுவனும்போல் தோணுதடா ஆகாயம் கிழியுதடா

புழுவாத்தான் துடிக்கிறனே புண்ணான மனசால

கழுவாத பாத்திரமா கரபட்டு கெடக்குறனே

ஒழுவாத கண்ணெல்லாம் உண்மையில நடிபேதான்.. 10





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post