சென்னைத்தமிழில் சிவம்

மொழிகளை கடந்த தமிழன். #ஈசன்

உள்ளுகுள்ள கீறான்பாரு கில்பான்ஸா நம்மாளு
உள்ள மஜாவதான் கீதுபாரு படுஜோரு
புட்டுக் கினுபோயிட் டாக்க சிவனே
இட்டுக் கினுவச்சி கிட்டான் பரனே.

காண்டுக் கெல்லாம் கில்லிக்காரன் பாரப்பால
கண்ணக் காட்டினா அப்பீட்டு தான்கேளு
உடான்சு யில்லாம குந்தினுக்கும் ஆளே
டபாய்ச்சா சாய்ச்சிடுவான் சோக்காளிதான் பாரே

டாலடிக்கும் நெருப்பு மாரியாளு எதுத்தா
டர்ருகாட்டும் மெர்சலான பார்டியத் தான்பாரு
வூட்டாண்ட போயிவந்தா கொடுக்குறான்யா ஜோரு
அவுல்குடுத்தா பல்புவுட வெச்சிருவான் பாரே.

கும்ட்டு கினுபோய்ட்டா தான்ஜோரு அப்பால
அம்புட்டு மள்ளி கொடுத்துடுவான் பாரு
டப்புமாலு  கேட்காத கெத்துகாரன் பாரு
இப்புடிக்கா வந்தவனுக்கு மெர்சலில்ல கேளே..
#விருத்தம்.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post