நாகாவதி ஆறு

ஆறொண்ணு சொல்லப் போறேன் கேட்டுக்கய்யா - தடயம்போன
ஆறொண்ணு சொல்லப் போறன் கேட்டுக்கய்யா
பேராறு பலநடுவே சீராறு தானய்யா
போராடி தோற்றதுல மூத்தாறு தானய்யா..
வரலாறு பலநூறு கெடக்கு வழக்குலதான்
புரண்டோட ஒரு செம்பு தண்ணியில்ல அதுக்குனுதான்.

கமண்டலத்து காவிரியின் சக்களத்தி இவதான்
சங்கடத்தில் சரிஞ்சுபோயி சாலையாகி போனவதான்..

மலைமூணு அரணாச்சு மகளாயிவ நடபயில
அலைநூறு பிறந்தாச்சு அணைகூட உண்டாச்சு..
கலைமகளின் வீணைபோல கடனுக்கேனு பேரிருக்கு..
விலைமகளின் வாழ்க்கப்போல  விடியாம போயிருக்கு...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post