எனக்கும் காதல் கவிதை வரும்

என்னில் நானே நிறைய நினைக்கிறேன்.. - ஆனாலும்
என்னுள் நீயே சுரந்து நிறைகிறாய்...


தன்னில் தானாய் தனியாய் இனியாய் - கனியாய்
கண்ணில் காணா கடும் வேளையில்..




அணையா இணையாய் துணையாய் - தீயாய்.
கணையோ கறையோ என்னுடன் கலப்பாய்..


காற்றிடம் கொஞ்சும் பூவிடம் கொஞ்சம் - கொஞ்சல்வாங்கி.
கொஞ்சிடும் நீயோ எனது கெஞ்சலின் கொஞ்சல்வங்கி...


ஆகமொத்தமாய் என்னில் நீயும் ..
அறைகுறையாய் உன்னிலா நானும்- கலந்திட்டோம்


ஆதாலால் என்னின் நீயே..
காதலால் உன்தன் நானே...


எனக்கும் காதல் கவிதை வரும் 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post