சாட்டிலைட் கவிதைகள் : எனக்கென யாருண்டு

எனக்கென யாருண்டு என் காதலே
நட்சத்திரத்தை காதலிக்க கூடாதென்றே - என் இதயத்தை
உனக்குள் வைத்துவிட்டு வந்தேன்எங்கேயோ....

நிலவிடம் மயங்கிட கூடாதே என்று - அதன்
பக்கம் கூட திரும்பாமல் நின்றேன்...

பகலிரவு இல்லா பாரண்டத்தில் - நானோ
பார்ப்பதெல்லாம்  உனைமட்டும் தான் பறவையே...

சிறகின்றி பறக்கிறாய் பம்பரமாய் சுழல்கிறாய்  - எத்துனைமுறை
துளைத்தாலும் சிரமம்காட்டாமல் சிரிக்கிறாய்...

ஒன்றறிவேன் உன் சூரியக்குடும்பத்தை  எதிர்க்கும் - திராணியுமில்லை
திறனுமில்லை என்றாலும் வெல்வேன் ஒருநாள்...

பொறுமையென்ன உன்தாய் வீட்டு சீதனமோ __ எப்போதும்
தவிகர்க்காமல் காத்திருக்கிறாய் பொறுமையாக..

எத்தனை நாள் என்றுதெரியாது என்நன்றிக்கடன் தீர  - அதுவரை
எப்படியாவது காத்திரு வருவேன் நான் என்றாவது....

எதிர்கால சங்கிலியில் காலநதியில் நாம் - வரலாற்றில்
ஒருபுதிய வார்ப்பினை வார்த்தெடுக்கவேண்டும் எனக்காக...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post