சந்திராஷ்டமம் பற்றிக் கூறவும்?

 

சந்திராஷ்டமம் பற்றிக் கூறவும்?

வழக்கமாக சந்திரன் தினசரி ஒரு நட்சத்திரம் என்று சுற்றிவரும் அப்படியாக ஒரு ராசியில் 2.5 முதல் மூன்று நாட்கள் வரை நகரும். இப்படி ஒருவரின் பிறந்த ராசியில் இருந்து 8வது ராசியில் இருப்பது சந்திர+ அட்டமம் - சந்திராஷ்டமம். சோதிட சாஸ்திர படி இயல்பாக எட்டு என்பது ராசிக்கு ப்ளைட் ஸ்பாட் அதாவது மறைவு இடம்.

ஒருவரின் மனநிலையை ஆளக்கூடிய சந்திரன் மறைவதால் அன்றைய தினங்களில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

இயல்பாக கவனசிதறல்கள் , மன குழப்பங்கள் , உணவு செரிமாண சிக்கல்கள் , முன்கோபம் முதலியன மிகந்து காணப்படும் அவற்றை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.

உதாரணமாக மேஷ ராசியினருக்கு விருச்சிகத்தில் சந்திரன் பயணிக்கும் போது சந்திராஷ்டமம் .




மனோகரன் - அன்னாகரன் என சந்திரனை சொல்லிவிடலாம்.

உங்கள் மனநிலைக்கும் உணவு விடயங்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அவரே பொறுப்பு. ஒருவருக்கு தாயார் பற்றி குறிப்பதும் சந்திரன் தான்..

இதர அசுப கிரகங்கள் நேரடியாக செயல்படாத பொழுது சந்திரனை வைத்தே தாக்கும்.

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS