தமிழிற்கு திருப்புகழ்..

தானதன தானதன தானதன தானதன தானதன தானதன - தந்ததான..

நீடுவரு பேருதரு நீலகடல் சூழகெடு நீந்திவுயிர் காணமொரு - மங்கையாக

ஈடுயென ஏதுமில ஈகையனை தூயமொழி ஈவுகரை தாவிதுணை - என்றதாயே.

சாடுவினை கேடுபட சாலசிறந் தேணியென சாகுமிவர் வாழவொரு - சிந்தையாவுங்

கூடுவுறை காதலிள வீடுதரு ஞானமொழி  காமமத தேசபேத - பந்தந்தீர

ஏடுநிறை பாடமது ஏகநிலை யாகவளர் தேகமதின் மோகமறு - செங்கைசோதி

பாடுமிள பாலனெனை நாடுயருள் கோடிதரும் தீரமொழி ஈரமதை - கண்டயானும்.

பாடுமலர் சூடுமுனை பாடுபுகழ் தேடியடி கூடுகிற பாதையினை - சொல்லுவாயே..

நாடுமொரு மாணவனை நாடுமது நாடும்படி ஈடுயிணை தேடியறி - கின்றதாரோ.

வாடுபவர் வாடலினை காணுகிற நாளைகெட வாளையெடு வாகையது - கொண்டதாயே..

மாடுபுகழ் மாடுவுனை கேடுயென கூறுபவர் கோளைநினைத் தேதினமும் - சந்தமாக.

பாடுகிறேன் பாடஅரும் பாடலுனை பாவமொடு பாவியேனும் பாடுகிறேன் - மற்றயாரை

யானறிய யாதறிய வாதமுடன் பேதமதை போதமதை யானறியேன் - என்றதாலே....

ஊனுருக ஊனுயிரும் ஊடொளியும் தானுருக தானுனையும் நானுருக - கொண்டதாயே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post