இந்த ரெண்டு பாட்டு என் பேவரைட் லிஸ்ட் .. அருணகிரியார் உண்மையா வெளிப்படையாாபேசிருப்பாரு..




.. எனக்கு இந்த பாட்டு பிடிக்க காரணம் என்னன்னா..
பணக்கஷ்டம் , வறுமை , வெறுமை சுற்றியிருப்பவர்களின் ஏளனம் , தாங்க முடியா துயரம். வாழவே விரும்பாத சூழல்ல. ஆன்மீகத்துல கூட முன்னேற்றம் இல்லாம இருக்குறப்ப. யார் யாரோ எப்படியெல்லாமோ நல்லா வாழும் போது தவத்திலாவது உன்னை அடையலாம்னு முயற்சி பண்ணா முடியல . யாருக்கும் கிடைக்காத பாக்கியமா உன் பாதத்தை நிதமும் துதிக்க மிக உயர்ந்த மொழியான தமிழை கொடுத்தியே எப்பா ஏஞ்சாமி இதெல்லாம் தர உனக்கு பிடிக்கலயா?. . ன்னு அழுவாரு.
என்பங்குக்கு நானும் எழுத வேண்டாம் .. .
அரியதொரு சோதிமிக்க அழகுபதம் தான்நினைத்து அடையும்வழி நானறியேன் - குமரேசா
அதிகதுய ரால்தவித்து அவதிமிகு வாழ்வினுக்குள் அழியும்படி யாய்விதிக்க - நினைந்தாயோ.
கரியபெரு மாளுதித்த கடலின்மிசை யேவிரிந்த கயிலைமலை யானசெந்தில் - பதிவாழ்வே
கருணைபுரி யாமலெனை கடைவெளியில் வீசிவிட்ட கருமமெதை யானொழிக்க - மொழிவாயோ
விரிசடையில் வான்பிறையும் விதிதனக்கு காலனையும் வழங்கியவர் தான்விரும்பும் - முருகோனே
வெளியவர்கள் வாழ்த்திடவும் வறுமைபிணி நீங்கிடவும் வளருமின்பம் நீகொடுக்க - வருவாயோ.
பரிதவிக்கும் மாறுயென்னை பவவினையி லேவிடுத்து பயிலுமொரு பாடமென்ன - பகர்வாயோ
பகலிரவி லாதுநித்தம் பணியுமொரு பாதபத்மம் பரவியெனை ஆளுங்கந்தப் - பெருமாளே..

0 Comments